Saturday, March 31, 2012

ஜெனீவா பிரேரணை குறித்து நாடாளுமன்றில் விவாதம்

 
[ சனிக்கிழமை, 31 மார்ச் 2012, 02:43.18 AM GMT ]
ஜெனீவா பிரேரணை தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் 4ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
ஜெனீவா பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விவாதத்தின் போது அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட உள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டு விடுமுறையின் பின்னர் மே மாதம் 8ம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்படவிருந்தது. எனினும், கட்சித் தலைவர்களின் கோரிக்கைக்கு அமைய அடுத்த வாரம் விவாதம் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
விவாதம் நடத்தப்பட வேண்டுமென ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கோரியுள்ளார்.

No comments:

Post a Comment

tamilfast