கிண்ணியா பிரதேசத்தில் எழிலரங்கு
மைதானத்திற்கு அருகிலுள்ள வீட்டின் அருகில் உள்ள நிலத்திலிருந்து இன்று
புகை வெளியாகியுள்ளது. வீட்டின் உரிமையாளர் காலை 11.00 மணியளவில் கழிவுப்
பொருட்களைப் புதைப்பதற்காக குழி தோண்டிய போது, புகை வெளியாகியுள்ளது.
குறித்த வீட்டு நிலத்தின் தோண்டப்பட்ட குழி, சிறிது
சிறிதாக பெரிதாகி அக்குழிக்குள் மூன்று இடங்களிலிருந்து கடந்த 3
மணித்தியாலங்களாக புகை வெளிவந்த வண்ணமுள்ளன.
இவ்வாறு நிலத்திலிருந்து திடீரென புகை வெளியாகியமையால் குறித்த பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அச்சமடைந்த பிரதேச மக்கள் பொலிஸில்
நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த பிரதேசத்தை சுற்றி
பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
2ம் இணைப்பு
தோண்டப்பட்ட குழியிலிருந்து வெளியேறிய புகை, தீயாக சுவாலை
விட்டு எரிவதால் அது எரிமலையின் சாயலை ஒத்திருப்பது போல தோன்றுவதால்
அப்பிரதேச மக்கள் மிகுந்த பதற்றத்தோடு இருப்பதாக பிரதேச செய்திகள்
தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment