Friday, May 4, 2012

கனேடியப் பிரஜை ஒருவர் பரந்தன் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கனேடியப் பிரஜை ஒருவர் பரந்தன் பகுதியில் வைத்து இனந்தெரியாதவர்களால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச்சம்பவம் கடந்ந இரவு  9 மணியளவில் பரந்தன் குமரபுரம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
தாயகத்தின் கிளிநொச்சி குமரபுரம் பகுதியில் உள்ள தனது காணிகளைப் பார்வையிடுவதற்காக கனடாவில் இருந்து வந்த நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கனேடியப்பிரஜையான அந்தோனிப்பிள்ளை மகேந்திரராசா வயது 53 என்பவரே இவ்வாறு கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டவராவார்.
இதனால் பரந்தன் குமரபுரம் பகுதியில் பதற்றமான நிலைமை காணப்படுகின்றது. இந்தப்படுகொலை தொடர்பில் உடனடியாக காரணங்கள் எதுவும் தெரியவரவில்லையாயினும் பாதுகாப்பு தொடர்பில் இந்தக்கொலை பாரிய அச்சத்தைத் தோற்றுவித்துள்ளதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டுப்பிரஜைகளுக்குக் கூட இங்கு தமது நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நிலைமைகள் தோன்றியிருப்பதாகவும் இதனால் தாயகம் வரும் ஏனைய பிரஜைகள் மத்தியிலும் இவ்வாறான கொலைகள் பெரும் அச்சத்தைத் தோற்றுவிப்பதாகவும் அங்குள்ள கல்வியியலாளர்கள் இவரின் இந்தக் கொலை தொடர்பில் தெரிவிக்கும் போது குறிப்பிட்டனர்.
இந்தக் கொலை தொடர்பான விசாரணைகளைப்பொலிசார் ஆர்வம் காட்டுகின்ற போதிலும் இந்தக்கொலைக்கு பின்னர் இங்கு பெரும் பதற்றமான நிலைமைகள் காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment

tamilfast