Friday, April 27, 2012

விடுவிக்கப்படும் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் பௌத்த விகாரைகள்: இராணுவத்தினரின் சதி?

இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்கப்படும் பகுதிகளில் திட்டமிடப்பட்ட வகையில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் விகாரைகளைக் கொண்டு அப்பகுதிகளை பௌத்த சிங்கள உரிமை கோரும் திட்டத்தில் இராணுவத்தினர் செயற்படுகின்றனர் எனவும் புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அண்மையில் விடுவிக்கப்பட்ட அரியாலை கிழக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த பகுதியிலும் இவ்வாறு விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மண்ணினால் சீமெந்துக்கலவையுடன் இணைந்து பழைமையான விகாரகைகள் போல இவை அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள விகாரைகளை அகற்றக்கூடாது என இராணுவத்தினர் பொது மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அமைக்கப்பட்ட விகாரைகள் பின்னர் இரண்டு மூன்று வருடங்களில் தொன்மை மற்றும் புனித பிரதேசமாக மாற்றப்படலாம் என்றும் பொது மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்

No comments:

Post a Comment

tamilfast