Monday, April 16, 2012

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மற்றொரு கண்டம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கை மீது அனைத்துலக கவனம் திரும்பும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், உலக நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை பற்றிய மீளாய்வு இடம்பெறவுள்ளது. இந்த மீளாய்வில் இலங்கை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
இந்தநிலையில், இலங்கை தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க ஐ.நாவின் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளுக்கு ஏப்ரல் 23ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு இலங்கைக்கு எதிர்வரும் ஜுலை 23ஆம் திகதி வரை காலஅவகாசம் அளிக்கப்படும். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நவம்பர் திகதி இலங்கை தொடர்பான மீளாய்வு விவாதம் நடத்தப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக அனைத்துலக பணிகள் தொடர்பான மீளாய்வை இலங்கை மேற்கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜுன் மற்றும் செப்டோம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில், முன்னேற்றங்கள் தொடர்பாக தாம் அறியப்படுத்தவுள்ளதாக இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

tamilfast