Wednesday, April 11, 2012

பரந்தன் – முல்லை வீதியில் வேகமாக அகற்றப்படும் படைமுகாம்கள்..

வன்னிப் பெருநிலப்பரப்பில், பரந்தன் சந்தியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச்செல்லும் பிரதான வீதியில் அமைந்திருந்த பிரதான இராணுவ முகாம்கள் நேற்று முன்தினம் தொடக்கம் அகற்றப்பட்டு வருவதாக அறியப்படுகிறது.
முரசுமோட்டைக்கு அண்மையாக அமைந்திருந்த முகாம், தருமபுரம் சந்தியில் அமையப்பெற்றிருந்த முகாம், சுண்டிக்குளம் சந்திக்கு அருகாமையிலுருந்த முகாம், விஸ்வமடு ரெட்பானா நகர் முகாம், ஆகிய முகாம்களே அகற்றப்பட்டிருக்கின்றன.
படையினரின் இத்திடீர் மாற்றம் குறித்து மக்கள் அச்சப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்தன.
அமெரிக்க மற்றும், ஐ.நா பிரதிநிதிகள் விஜயம் காரணமாகவும், படைமுகாம்கள் வன்னியிலிருந்து அகற்றப்பட்டுவிட்டதாக மேற்குலகிற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் காட்டிக்கொள்வதற்காகவும் இந்நாடகம் நடாத்தப்படலாம் எனவும் மக்கள் விசனம் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

tamilfast