Thursday, April 12, 2012

எஞ்சியுள்ள 700 புலி உறுப்பினர்களை விடுவிக்க ஒரு வருட காலம் செல்லும்!- புனர்வாழ்வு ஆணையாளர்

முகாம்களில் எஞ்சியுள்ள 700 முன்னாள் புலி உறுப்பினர்களை விடுதலையை இன்னும் ஒரு வருடம் வரை செல்லும். விடுதலையடைந்தவர்கள் சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக வாழ்கின்றனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட பெரும்பாலான புலி உறுப்பினர்களுக்கு முகாம்களில் புனர்வாழ்வு அளித்தோம். அத்தோடு தொழில்சார் பயிற்சிகளை வழங்கி தத்தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளத் தேவையான ஒழுங்குகளை செய்து கொடுத்துள்ளோம்.
பெரும்பாலானோர் விடுதலை செய்யப்பட்டு தற்போது எழுநூறு பேர் மாத்திரமே புனர்வாழ்வு பெற்று வருகின்றனர்.
இவர்களை விடுதலை செய்ய நீண்ட நாட்கள் எடுக்கும். ஏனெனில் மேற்படி 700 பேருக்கும் விஷேட வகையில் புனர்வாழ்வுகள் அளிக்கப்பட வேண்டியுள்ளது.
மேலும் புத்தாண்டை முன்னிட்டு விஷேட விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் வாரத்தில் வவுனியாவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறினார்

No comments:

Post a Comment

tamilfast