மட்டக்களப்பு நகரில்
மிகவும் பிரசித்தி பெற்றதும் சுமார் அறுவது வருடங்களுக்கு முன்னர்
அமைக்கப்பட்டதுமான அகிம்சைவாதி மகாத்மா காந்தியின் சிலை மற்றும் சாரணியத்தின் தந்தை
பேடன் பவல் ஆகியோரின் சிலைகள் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளன.
கற்றுக்கொண்ட
பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அரசியல் ரீதியான முன்மொழிவுகளை
அமுல்படுத்த முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
2011 டிசம்பரில் நடைபெற்ற
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பகுப்பாய்வின் முடிபு
வெளியாகியுள்ளது. நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், யாழ்ப்பாண
மாவட்டத்தின் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வீழ்ச்சி கண்டுள்ளதை அறிய
முடிகின்றது.
‘சன் சீ‘ கப்பலில் 492
தமிழர்களை அகதிகளாக கனடாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைத்தாக, பிரான்சில் கைது
செய்யப்பட்ட தமிழர் ஒருவரே குற்றவாளி என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
வடக்கு மாகாண அரச
நிர்வாகத்தில் மாகாண ஆளுநர் தேவையற்ற தலையீடுகளை மேற்கொண்டு வருவதால் தங்களால்
பணிகளைச் சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வடக்கு அரச
உயரதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில்
அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்ததால் இந்தியாவை பழிதீர்க்கும் செயற்பாடுகளை
மகிந்த அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக அலரி மாளிகைத் தரப்புத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூநகரி மகா வித்தியாலய
முதன்நிலை விஞ்ஞான பாட ஆசிரியர் ஒருவர் மேலதிகாரி ஒருவரின் பழிவாங்கல் நடவடிக்கை
காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மட்டக்களப்பில் உள்ள
தனியார் வங்கியொன்றில் கடன் அட்டையொன்றை பயன்படுத்தி வங்கிக் கணக்கிலிருந்து 11,000
ரூபாவை திருடிய இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தமது
நாட்டிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஜெனிவா தீர்மானம், உள்நாட்டு விவகாரங்களில்
சர்வதேசம் தலையிடுவதற்கான நுழைவாயிலாகி விட்டது என்றும், மேற்குலகம் இலங்கையின்
அடையாளத்தை சிதைக்க எண்ணுகின்றது என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள் இலங்கை அரசின்
பக்கமிருந்து வந்த வண்ணம் உள்ளன.
மட்டக்களப்பு நகரின்
மத்தியில் நீண்ட காலமாக இருந்து வரும் காந்தியின் சிலையும், பேடன் பவல் அவர்களின்
சிலையும் உடைக்கப்பட்டமை மாவட்டத்தின் வாழ் தமிழ் மக்களை மிகவும்
வேதனைப்படுத்தியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற
உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
யாழ்
மாவட்டத்திலுள்ள நன்னீர் கிணறுகளில் மலசலகூட நீர் கலந்து மக்களுக்கு தெற்றுநோய்
ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக வேள்ட் விஷன் நிறுவனத்தின் திட்ட
முகாமையாளர் றொசைஸ்றோ தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச சபையின் கீழ்
உள்ள மண்டைத்தீவு பகுதிக்கு மின் இணைப்பு வழங்க முடியாதென வேலணைப் பகுதிக்கு
பொறுப்பான மின்சார சபை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா
மனித உரிமைச் சபையினை மையப்படுத்தி, மலேசியத் தமிழர்கள் மேற்கொண்ட
போராட்டங்களுக்கும், அரசியற் செயற்பாடுகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
பிரதமர் வி.உருத்திரகுமாரன் நன்றி தெரிவித்துள்ளார்.
யாழ்.பொலிஸாரால் பண
மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நபர் எனது பிரத்தியேக செயலாளர் அல்ல.
கட்சியின் உறுப்பினராகவுள்ள அவர் மீது எடுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கு முழு
ஒத்துழைப்பையும் வழங்கத் தயாரென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட பிரதான
அமைப்பாளர் அங்கஜன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில்
வாழும் தமிழர்களின் நிலை குறித்து அறிய, இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற
உறுப்பினர்கள் குழுவில் அதிமுகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்
இடம்பெறுகிறது.
கொலம்பியாவில்
10 வயது சிறுமி தாயாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சிறுமி
தான் உலகிலேயே மிக குறைந்த வயதில் தாயானவள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க
வெள்ளை மாளிகையின் பெறுமதியை அதிகரிக்கும் பொருட்டு அதனை கூகுள் மப்பில் இணைத்து
முப்பரிமாணத்தோற்றத்தில் 360 டிகிரியில் ஒளிபரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கனடாவில்
கியூபெக் மாகாணத்தில் கல்விக்கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்
நடத்தினர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர சில திட்டங்களை அரசு வகுத்துள்ளது.
No comments:
Post a Comment