Monday, April 9, 2012

பளையில், இராணுவ காவலரணை தகர்த்தது கன்டர் வாகனம்! நால்வர் காயம்! இரு படையினர் கவலைக்கிடம்

ஏ- 9 வீதியிலுன் பளை நகரில் பயணித்துக் கொண்டிருந்த கன்டர் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலுள்ள இராணுவ காவலரணை தகர்த்துள்ளது.
இதனால் குறி;த்த காவலரணில் கடமையாற்றிக்கொண்டிருந்த இரண்டு இராணுவத்தினர் மற்றும் கன்டர் ரக வாகனத்தில் பயணித்த இருவர் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் இராணுவத்தினர் இருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

tamilfast