ஜே.வி.பி.யின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீர நிறுத்திய
இடத்திலிருந்து நாம் தொடர்வோம் என புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முன்னணி
சோசலிச கட்சி அறிவித்துள்ளது.
புதிய கம்யூனிச பாதையை உருவாக்குவதே தமது நோக்கம் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் சேனாதீர குணதிலக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்ற கட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டுக்கு தேவையான புதிய அரசியல் பிரவாகம் ஒன்று உருவாக்கப்படும்.
கட்சியின் பயணத்தை தடுக்கும் நோக்கில் குமார் குணரட்னம், திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தப்பட்டுள்ளனர்.
சமூக நீதிக்கான போராட்டம் இடையறாது தொடரப்படும் என அவர் தெரிவித்துள்ளா
No comments:
Post a Comment