Tuesday, April 10, 2012

நாட்டின் பொருளாதார நன்மைகள் சாதாரண பொதுமக்களுக்கு சென்றடைகின்றதா?: ஜனாதிபதி மஹிந்த கேள்வி

பொருளாதார நன்மைகள் சாதாரண பொதுமக்களுக்கு சென்றடைகின்றதா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு அடைந்து வரும் பொருளாதார அபிவிருத்தி சாதாரண மக்களுக்கு சென்றடையக் கூடிய வகையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
30 ஆண்டுகளாக நீடித்த போர் காரணமாக பொருளாதார ரீதியான நன்மைகளை முழுமையாக அடையக் கிடைக்கவில்லை.
கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேற மனித வளங்கள் நாடு திரும்பி வருகின்றன.
இந்த வளங்களை உரிய முறையில் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆண்டறிக்கை வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment

tamilfast