Tuesday, April 10, 2012

யாழில் வயிற்றில் குழந்தையுடன் இளம் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வயிற்றில் குழந்தையுடன் இளம் பெண்ணெருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டள்ளார்.
இந்த பெண் திருமணமாகியவருடன் கள்ளக்காதல் வைத்திருந்தாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த குடும்பஸ்தரால் ஏமாற்றப்பட்ட இளம் பெண் தூக்கில் தொங்கியுள்ளார் இணுவில் கந்தசாமி கோவிலடியைச் சேர்ந்த சுரேஸ்குமார் என்னும் இரு திருமணங்கள் செய்த ஒருவனால் இளம் பெண் ஏமாற்றப்பட்டுநேற்று திங்கள் கிழமை இரவு தூக்கில் தொங்கி இறந்துள்ளார். இவர் கொலை செய்யப்பட்டு இறந்தாரா என்பது தொடர்பாக பொலிஸார் விசாணையை மேற் கொண்டு வருகின்றனர்.
இந்த சுரேஸ்குமார் என்னும் நபருக்கு ஏற்கனவே திருமணமாகிய ஒரு மனைவியும் இன்னொரு காதலியும் இருந்துள்ளனர். இதில் மனைவி விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார் என்றும் தெரியவருகின்றது. இதே வேளை தற்போது தூக்கில் தொங்கிய தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணையும் திருமண ஆசை காட்டி தனது இச்சைக்குப் பயன்படுத்தியுள்ளான் இந்தச் சுரேஸ்குமார் எனத் தெரிவிக்கப்படுகிறது .
யாழில் இடம்பெற்றுவரும் கலாச்சர பிறழ்வு நிலையின்காரணமாக பல இளம் பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு கண்ணீருடன் வாழ்வதாக யாழ்.போதனா வைத்திய சாலை மனநல மருத்துவப் பிரிவு குறிப்பிட்டுள்ளது

No comments:

Post a Comment

tamilfast