Wednesday, April 11, 2012

Share யாழில் மனித உரிமையாளர்களின் செயற்பாட்டிற்கு இடையூறு விளைவிக்கும் பொலிசார்

யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தமது கடமையைச் செய்வதற்கு யாழ். பொலிஸார் இடையூறு விளைவிப்பதாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று காலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

"யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படும் சந்தேகநபர்களை மாதத்தில் ஒரு தடவை சென்று பார்வையிட்டு யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணை செய்து வருவது வழக்கம்.

அவர்களின் மனித உரிமை சார்ந்த நலன்கள் பேணப்படுகிறதா என விசாரிப்பது எமது கடமை. எமது கடமையைச் செய்யவிடாது யாழ்.பொலிஸ் அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பொலிஸார் மீது விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது  என யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment

tamilfast